கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்
குற்றமொன் றில்லாத கோவலர்தம் பொற்கொடியே!
புற்றர வல்குல் புனமயிலே! போதராய்
சுற்றத்துத் தோழிமா ரெல்லாரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட,
சிற்றாதே பேசாதே செல்வப்பெண் டாட்டிநீ
ஏற்றுக் குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்.
செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்
குற்றமொன் றில்லாத கோவலர்தம் பொற்கொடியே!
புற்றர வல்குல் புனமயிலே! போதராய்
சுற்றத்துத் தோழிமா ரெல்லாரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட,
சிற்றாதே பேசாதே செல்வப்பெண் டாட்டிநீ
ஏற்றுக் குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்.
பொருள்:
இடையர், கன்றுகளையுடைய கறவைப் பசுக்கூட்டங்கள் பலவற்றைப் பால் கறப்பர்; பகைவர்களின் வலிமை அழியும்படி சென்று போர் செய்வர்; குற்றம் ஒன்றுமில்லாதவர். அவர்களது, தங்கக் கொடி போன்ற பெண்ணே! புற்றில் இருக்கும் பாம்பு போன்ற அல்குலையுடையவளே! காட்டில் திரியும் அழகிய மயில் போன்றவளே! எழுந்து வா! நம் உறவினராகிய தோழிமார் எல்லாரும் வந்து, உன் வீட்டு வாசலிலே புகுந்து முகில்வண்ணன் திருநாமத்தைப் பாடுகின்றோம். செல்வப் பெண்ணே! கொஞ்சம் கூட அசையாமலும், பேசாமலும், நீ எதற்காக இவ்வாறு உறங்குகின்றாய்? இதற்குப் பொருள்தான் என்ன?
No comments:
Post a Comment