நாயக னாய்நின்ற நந்தகோ பனுடைய
கோயில்காப் பானே! கொடித்தோன்று தோரண
வாயில்காப் பானே! மணிக்கதவம் தாள்திறவாய்;
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்;
தூயோமாய் வந்தோம், துயிலெழப் பாடுவான்;
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே, அம்மா! நீ
நேய நிலைக்கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்.
கோயில்காப் பானே! கொடித்தோன்று தோரண
வாயில்காப் பானே! மணிக்கதவம் தாள்திறவாய்;
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்;
தூயோமாய் வந்தோம், துயிலெழப் பாடுவான்;
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே, அம்மா! நீ
நேய நிலைக்கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்.
பொருள்:
(எல்லோரும் திருக்கோயில் முன் சென்று பாடுகின்றனர்)
உலகுக்கெல்லாம் தலைவனாய் நிலைத்திருக்கின்றவனாகிய நந்தகோபனுடைய திருக்கோயிலைக் காப்பவனே! கொடிகள் விளங்கித் தோன்றுகின்ற தோரண வாயிலைக் காப்பவனே! மணிக் கதவின் தாழ்ப்பாளைத் திறப்பாய்! இடையர்களின் சிறுமியராகிய எங்களுக்கு நோன்பு நிறைவுக்கான பறை ஒன்றைத் தருவதாக மாயனாகிய மணிவண்ணன் நேற்றே வாக்களித்தான்; அந்த எம்பெருமான் துயில் எழுந்தருளுமாறு பாடுவதற்கு, உள்ளும், புறமும் தூயவர்களாய் நாங்கள் வந்தோம். உன் வாயாலே, முதன் முதலிலேயே மறுத்துச் சொல்லிவிடாதே அப்பனே! வாயில் நிலையோடு நேசமாக பொருந்தியிருக்கும் கதவை நீ, நீக்கு!
No comments:
Post a Comment