எல்லே! இளங்கிளியே இன்னம் உறங்குதியோ?
சில்லென் றழையேன்மின், நங்கைமீர் போதருகின்றேன்
வல்லைஉன் கட்டுரைகள், பண்டேஉன் வாயறிதும்!
வல்லீர்கள் நீங்களே, நானேதா னாயிடுக!
ஒல்லைநீ போதாய்; உனக்கென்ன வேறுடையை?
எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்தெண்ணிக்கொள்
வல்லானை கொன்றானை, மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்.
சில்லென் றழையேன்மின், நங்கைமீர் போதருகின்றேன்
வல்லைஉன் கட்டுரைகள், பண்டேஉன் வாயறிதும்!
வல்லீர்கள் நீங்களே, நானேதா னாயிடுக!
ஒல்லைநீ போதாய்; உனக்கென்ன வேறுடையை?
எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்தெண்ணிக்கொள்
வல்லானை கொன்றானை, மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்.
பொருள்:
எழுப்புவோர்: ஏடி! (ஏனடி, ஏண்டி) இளங்கிளியே! நீ இன்னமுமா உறங்குகின்றாய்?
எழாதிருப்பவள்: பெண்களே! "சில்" என்று கத்திக் கூப்பிடாதீர்கள்! இதோ வந்து விடுகின்றேன்!
எழுப்புவோர்: நீ, மிகவும் கெட்டிக்காரி! உன் பேச்சுக்களை முன்னமே அறிந்திருக்கிறோம்! உன் வாயையும் அறிவோம்!
எழாதிருப்பவள்: கெட்டிக்காரிகள் நீங்களேயானாலும் சரி! நானேதான் ஆனாலும் சரி.
எழுப்புவோர்: சீக்கிரம் நீ எழுந்துவா! இந்தக் கெட்டிக்காரத்தனம் தவிர உனக்கு என்று வேறு என்ன வைத்திருக்கின்றாய்?
எழாதிருப்பவள்: எல்லோரும் வந்துவிட்டனரா?
எழுப்புவோர்: வந்து விட்டார்கள்! நீ வந்து எண்ணிக்கொள்; குவலயாபீடம் என்னும் வலிய யானையைக் கொன்றவனை, பகைவரின் செருக்கை அழிக்க வல்லவனை, மாயனைப்பாடு!
No comments:
Post a Comment