Sunday, December 21, 2008

பாடல் -5

மாயனை மன்னு வடமதுரை மைந்தனை,
தூய பெருநீர் யமுனைத் துறைவனை,
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை,
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்துநாம் தூமலர் தூவித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய்.

பொருள்:

மாயச் செயல்களைச் செய்தவனும் வடமதுரையில் அவதரித்தவனும் யமுனைக் கரையில் வசிப்பவனும் கோகுலத்தில் தோன்றிய சோதியும் பெற்ற வயிற்றுக்குத் தன் பிறப்பினால் பெருமை உண்டாக்கியவனும் ஆகிய கண்ணபிரானை நாங்கள் தூய்மையுடன் வந்து மலர்களைத் தூவி வணங்கி, வாயாரப் பாடி, மனமாரத் தியானித்தால் செய்த பாவங்களும் செய்யப்போகின்ற பாவங்களும் தீயில் இட்ட தூசு போல எரிந்து மறைந்துவிடும். எனவே அவனது திருநாமங்களைச் சொல்வாய்.

No comments:

Post a Comment