கீசுகீ சென்றெங்கும் ஆனைச்சாத் தன்கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழ லாய்ச்சியர் மத்தினால்
ஓசைப் படுத்த தயிரரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண்பிள்ளாய்! நாரா யணமூர்த்தி
கேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ?
தேச முடையாய்! திறவேலோ ரெம்பாவாய்!
பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழ லாய்ச்சியர் மத்தினால்
ஓசைப் படுத்த தயிரரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண்பிள்ளாய்! நாரா யணமூர்த்தி
கேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ?
தேச முடையாய்! திறவேலோ ரெம்பாவாய்!
பொருள்:
துயிலும் பெண்ணே! "கீசி கீசு" என்று எங்கும் ஆனைச்சாத்தன் பறவைகள் ஒன்றோடு ஒன்று கலந்து பேசின. அந்தப் பேச்சின் ஒலி உனக்குக் கேட்கவில்லையா? மணம் பொருந்திய கூந்தலையுடைய இடைச்சியர் தங்கள் கழுத்தில் உள்ள அச்சுத் தாலியும், ஆமைத்தாலியும் "கலகல" என்று ஒலிக்க, கைகளை அசைத்து, மத்தினால் கடைந்து ஒசைப்படுத்தும் தயிரின் ஒலியும் கேட்கவில்லையா? தலைமையுடைய பெண்ணே! நாராயணனாகிய மூர்த்தியை, கேசவனை நாங்கள் பாடுகின்றோம்; நீ கேட்டுக்கொண்டே கிடக்கின்றாயோ? ஒளியுடையவலே! கதவைத்திற!
No comments:
Post a Comment