Tuesday, December 16, 2008

பாடல் -2

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ! பாற்கடலுள்
பையத் துயின்ற பரமன் அடிபாடி,
நெய்யுண்ணோம்; பாலுண்ணோம்; நாட்காலை நீராடி
மையிட் டெழுதோம்; மலரிட்டு நாம் முடியோம்;
செய்யா தனசெய்யோம்; தீக்குறளைச் சென்றோதோம்;
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமா றெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்.

பொருள்:

பூமியில் வாழப் பிறந்தவர்களே! உய்யும் வகையை எண்ணி மகிழ்ந்து, நமது பாவை நோன்பிற்கான நெறிமுறைகளைக் கேளுங்கள். பாற்கடலில் அறிதுயில் கொள்கின்ற பரமனின் திருவடிகளைப் பாடி, விடியற்காலத்தில் நீராடுவோம்; தானத்தையும் பிச்சையையும் செருக்கு இல்லாமல் கொடுப்போம்; நெய்யும் பாலும் உண்ணமாட்டோம்; கூந்தலைப் பூச்சூட்டி முட்க்கமாட்டோம்; பெரியோர் செய்யாதவற்றைச் செய்ய மாட்டோம்; கண்ணபிரானிடம் போய், பிறருக்குத் தீமை உண்டாகுமாறு கோள் சொல்லமாட்டோம்.

No comments:

Post a Comment