ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொ டார்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி, வலம்புரிபோல் நின்றதிர்ந்து,
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.
ஆழியுள் புக்கு முகந்துகொ டார்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி, வலம்புரிபோல் நின்றதிர்ந்து,
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.
பொருள்:
கடல் போன்று கம்பீரமான மழைக்கு உரிய அண்ணலே! எதையும் நீ மறைக்காதே. கடலுள் சென்று நீரை முகந்து கொண்டு ஆரவாரத்துடன் ஆகயத்திலேறி, காலம் முதலான எல்லாவற்றிற்கும் முதற்காரணனான எம்பெருமானுடைய திருமேனி போல் கறுத்து, வலிமை பொருந்திய அழகிய தோள்களைக் கொண்ட அவனது கையில் உள்ள சக்கரம் போல் மின்னி, வலம்புரிச் சங்கு போல முழங்கி, சார்ங்கம் என்னும் வில்லிலிருந்து கிளம்பும் அம்பு மழை போல, உலகினர்க்கு வாழ்வளிக்கவும் நாங்கள் மார்கழி நீராடவும் விரைவில் பெய்வாயாக!
கடல் போன்று கம்பீரமான மழைக்கு உரிய அண்ணலே! எதையும் நீ மறைக்காதே. கடலுள் சென்று நீரை முகந்து கொண்டு ஆரவாரத்துடன் ஆகயத்திலேறி, காலம் முதலான எல்லாவற்றிற்கும் முதற்காரணனான எம்பெருமானுடைய திருமேனி போல் கறுத்து, வலிமை பொருந்திய அழகிய தோள்களைக் கொண்ட அவனது கையில் உள்ள சக்கரம் போல் மின்னி, வலம்புரிச் சங்கு போல முழங்கி, சார்ங்கம் என்னும் வில்லிலிருந்து கிளம்பும் அம்பு மழை போல, உலகினர்க்கு வாழ்வளிக்கவும் நாங்கள் மார்கழி நீராடவும் விரைவில் பெய்வாயாக!
No comments:
Post a Comment