தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய,
தூபம் கமழத் துயிலணைமேல் கண்வளரும்,
மாமான் மகளே! மணிக்கதவம் தாழ்திறவாய்;
மாமீர் அவளை யெழுப்பீரோ? உம்மகள்தான்
ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ?
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?
'மாமாயன் மாதவன் வைகுந்த' னென்றென்று
நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்
தூபம் கமழத் துயிலணைமேல் கண்வளரும்,
மாமான் மகளே! மணிக்கதவம் தாழ்திறவாய்;
மாமீர் அவளை யெழுப்பீரோ? உம்மகள்தான்
ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ?
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?
'மாமாயன் மாதவன் வைகுந்த' னென்றென்று
நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்
பொருள்:
தூய மாணிக்கங்களை அழுத்திச் சமைத்த மாடத்திலே சுற்றிலும் விளக்குகள் அரியவும், அகில் முதலியவற்றின் புகை மணக்கவும், தூங்குவதற்கென்றே உள்ள படுக்கையின் மீது கண் உறங்குகின்ற அம்மான் மகளே! மாணிக்கக் கதவின் தாழ்ப்பாளைத் திற! (மாமன் மகளை இவ்வாறு அன்போடு எழுப்பியும் அவள் எழவில்லை; ஆதலால் அவள் தாயை அழைத்து, அவளை எழுப்பும்படி வேண்டுகின்றனர்.) மாமியாரே! உங்கள் மகள் எங்களுக்குப் பதிலே சொல்லாதலால் ஊமையோ? அல்லது (Kஏளாத_ செவிடோ? உறக்கமோ? ஒழிவில்லாத ஆழ்ந்த உறக்கத்தில் மந்திரத்தினால் கட்டுப்பட்டுக் கிடக்கிறாளோ? "மாமாயனே! மாதவனே! வைகுந்தனே!" என்று அவனுடைய திருநாமங்கள் பலவற்றையும் கூறினோம்; ஆயினும் அவள் எழவில்லை; அவளை எழுப்ப மாட்டீர்களா?
No comments:
Post a Comment