கனைத்திளங் கற்றெருமை கன்றூக் கிரங்கி
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
பனித்தலை வீழநின் வாசற் கடைபற்றிச்
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக் கினியானைப் பாடவும்நீ வாய்திறவாய்;
இனித்தா னெழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்!
அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோ ரெம்பாவாய்.
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
பனித்தலை வீழநின் வாசற் கடைபற்றிச்
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக் கினியானைப் பாடவும்நீ வாய்திறவாய்;
இனித்தா னெழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்!
அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோ ரெம்பாவாய்.
பொருள்:
இளங்கன்றினையுடைய எருமைகள் கனத்து, தம் கன்றின் மீது இரக்கம் கொண்டு கன்றை நினைத்து நின்று, தம் முலை வழியாகப் பால் சொரிந்து நனைத்து, வீட்டைச் சேறாக்குகின்றன; அத்தகைய எருமைகளையுடைய நல்ல செல்வனுடைய தங்கையே! மார்கழி மாதப் பனி எங்கள் தலையிலே விழ, உன் வீட்டுக்கடை வாசலில் நிற்கின்றோம்; தென்னிலங்கை வேந்தனாகிய இராவணனைக் கோபத்தினால் அழித்த, நெஞ்சிற்கு இனியவனான இராமபிரானை நாங்கள் பாடுகின்றோம். கதவைத் திற! இது என்ன உறக்கம்? நாங்கள் உன்னை இப்படி அழைப்பது எல்லா வீட்டாருக்கும் தெரிந்து விட்டது! இனியாவது எழுந்து வா!
No comments:
Post a Comment