Thursday, December 18, 2008

பாடல் -3

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றிநீர் ஆடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரி பெய்து
ஓங்கு பெருஞ்செந்ந லூடு கயலுகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப,
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்.

பொருள்:

ஓங்கி வளர்ந்து உலகங்களைத் தம் திருவடியால் அளந்த (நினைக்க: மகாபலி சக்ரவர்த்தி கதை... வாமன அவதாரம்) ஸ்ரீமன் நாராயணின் திருநாமங்களைப் பாடி பாவை நோன்பிற்காக நாங்கள் நீராடினால், நாடு முழுவதும் எந்தவிதத் தீங்கும் இல்லாமல் மாதம் மூன்று மழை பெய்யும் அதனால் உயர்ந்து வளர்ந்து விளங்கும் செந்நெற் பயிற்களின் ஊடே தண்ணீர் மிகுதியால் கயல்மீன்கள் துள்ளும்; அழகிய குவளை மலர்களில் வண்டுகள் உறங்கும்; கறப்பவர்கள் மடிகளைப் பற்றி இழுக்க, பசுக்கள் பாலால் குடங்களை நிறைத்து விடும். இப்படியாக நீர்வளம், நிலவளம் மற்றும் பால்வளம் மிகுந்து அழிவற்ற செல்வம் நிறையும்.

No comments:

Post a Comment