உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பின காண்
செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய்! எழுந்திராய்; நாணாதாய்! நாவுடையாய்!
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய்.
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பின காண்
செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய்! எழுந்திராய்; நாணாதாய்! நாவுடையாய்!
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய்.
பொருள்:
முந்தி வந்து உங்களை எழுப்புவேன் என்று வாயால் வெறும் பேச்சுப் பேசிய நங்கையே! எழுந்திரு! வெட்கமில்லாதவளே! நாவின் நீட்சியையுடையவளே! உங்கள் வீட்டுப் புழைக்கடைத் தோட்டத்தில் உள்ள குளத்திலே செங்கழுநீர்ப் பூக்கள் பூத்தன; ஆம்பல் மலர்கள் இதழ் குவிந்து வாய் மூடின; காவியாடை உடுத்தவரும், வெண்மையுடைய பற்களையுடையவருமான தவசீலர்கள், தாங்கள் பொறுப்பேற்றுள்ள திருக்கோயில்களைத் திறக்கச் சென்று விட்டனர்; சங்கு, சக்கரம் ஏந்திய நீண்ட திருக்கைகளையும் தாமரைக் கண்களையும் உடையவனைப் பாடுவோமாக!
No comments:
Post a Comment