Wednesday, December 31, 2008

பாடல் -13

புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப்
பிள்ளைக ளெல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி யெழுந்து வியாழ முறங்கிற்று;
புள்ளும் சிலம்பினகாண்; போதரிக் கண்ணினாய்!
குள்ளக் குளிரக் குடைந்துநீ ராடாதே
பள்ளிக் கிடத்தியோ? பாவாய்! நீ நன்னாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய்.

பொருள்:

நம் பெருமான், பறவை வடிவமாக வந்த பகாசுரனுடைய வாயைப் பிளந்து எறிந்தவன்; கொடிய அரக்கனாகிய இராவணன் தலைகள் பத்தினையும் அறுத்து அழித்தவன்; அவனுடைய வீரப்புகழைப் பாடிக்கொண்டு பிள்ளைகள் எல்லாரும் பாவை நோன்பை நோற்கும் இடத்திற்க்குபோய்ப் புகுந்தனர்ல; விடிவெள்ளி தோன்றி விட்டது; வியாழன் மறைந்து விட்டது; பறவைகள் ஒலிக்கின்றன. மலர் போன்ற அழகிய இரேகை பொருந்திய விழியுடையவளே! பாவையே! இந்த நல்ல நாளில் நீ, உன் கள்ளத்தனத்தை விட்டு விட்டு எங்களோடு கலந்து கொண்டு, குளிரக் குளிரக் குடைந்து நீராடாமல், படுக்கையில் கிடக்கின்றாயா?

No comments:

Post a Comment