கீழ்வானம் வெள்ளென் றெருமை சிறுவீடு
மேய்வான் பரந்தனகாண்! மிக்குள்ள பிள்ளைகளும்
போவான்போ கின்றாரைப் போகாமல் காத்துன்னைக்
கூவுவான் வந்துநின்றோம், கோது கலமுடைய
பாவாய்! எழுந்திராய்; பாடிப் ப்றைகொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்,
ஆவாவென் றாராய்ந் தருளேலோ ரெம்பாவாய்
மேய்வான் பரந்தனகாண்! மிக்குள்ள பிள்ளைகளும்
போவான்போ கின்றாரைப் போகாமல் காத்துன்னைக்
கூவுவான் வந்துநின்றோம், கோது கலமுடைய
பாவாய்! எழுந்திராய்; பாடிப் ப்றைகொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்,
ஆவாவென் றாராய்ந் தருளேலோ ரெம்பாவாய்
பொருள்:
மனம்கிழ்ச்சியுடைய பெண்ணே! கிழக்கே வானம் வெளுத்தது. எருமைகள் சிறிதுநேரம் விடுதலை பெற்று மேய்வதற்க்காகச் சென்று பரவியுள்ளன. நோன்பு செய்யும் இடத்திற்குப் பலர் சென்று விட்டனர். மீதமுள்ளவர்களும் அங்கே கும்பிடும் நோக்கத்தோடு புறப்படுகின்றனர்; அவர்களைப் போக விடாமல் நிறுத்திவைத்து, உன்னை அழைக்க வந்து நின்றோம், எழுந்துவா! நம் இறைவன் குதிரை வடிவம் எடுத்து வந்த அசுரனது வாயைப் பிளந்தவன்; கம்சன் ஏவிய மல்லர்களை அழித்தவன்; தேவர்கள் எல்லார்க்கும் பெரிய தேவன்! அவனை நாம் சென்று அடைந்து பாடி, வேண்டிக் கொண்டு வணங்கினால், "ஆ" என்று வாய் திறந்து இரக்கம் காட்டி "வா" என்று அழைத்து நம் வேண்டுதலை ஆராய்ந்து அருள்புரிவான்.
No comments:
Post a Comment